Friday, March 21, 2014

தொழுகை

கஅபாவை முன்னோக்குதல்
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற 
கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 'இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:144

...நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602



தண்ணீரின் சட்டங்கள்உளூச் செய்தல்கடமையான குளிப்பு

என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோஅவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  
 நூற்கள்: புகாரிமுஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்களின் தொழுகை முறையை நாம் தெரிந்து கொள்வதற்குமுன் , ஒளு செய்யும் முறைஎந்தத் தண்ணீரை ஒளு செய்வதற்கு பயன்படுத்தலாம் என்ற விளக்கம்மலஜலம் கழிக்கும் முறை அதிலிருந்து சுத்தம் செய்யும் முறைஒளுவை முறித்துவிடக்கூடிய செயல்கள்மாதவிடாய்பிரசவத்தின் பின் ஏற்படும் உதிரப்போக்குகுளிப்பு போன்ற பல சட்டங்களை நாம் விளங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தண்ணீரின் சட்டங்கள்
மழை நீர்

அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காக அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான். 
அல்குர்ஆன் 8:11

நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கின்றோம். 
அல்குர்ஆன் 25:48

மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானதுஅதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறுகுளம்ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் தூய்மையானது என்பது தெளிவு.

கடல் நீர்

கடல் நீரில் நாங்கள் ஒளு செய்யலாமா?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது “அதன் தண்ணீர் தூய்மையானது (கடல் பிராணிகளில்) தானே செத்தவைகளும் ஹலாலாகும்என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்அபூதாவூத்நஸயீதிர்மிதீஇப்னுமாஜ்ஜா

கடல் நீரில் ஒளு செய்யலாம் என்பதற்கு இது போதிய சான்றாகும்.

கிணற்று நீர்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘ஜம் ஜம்’ கிணற்று நீரைக் கொண்டுவரச் செய்து குடித்தார்கள். அதில் ஒளுவும் செய்தார்கள். 
அறிவிப்பவர்: அலி رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: அஹ்மத்

இந்த நபிவழி மூலம் கிணற்று நீர்ஊற்று நீர் ஆகியவைகளால் ஒளு செய்யலாம்.

உறைபணிஆலங்கட்டி

வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக விழும் ஆலங்கட்டியினாலும்உறைபனிக் கட்டிகளாலும் ஒளு செய்யலாம் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாகிறது.

இறைவா! என் தவறுகளைத் தண்ணீராலும்,  ஆலங்கட்டியினாலும்பனிக்கட்டியினாலும் நீ கழுவிடு! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்அஹ்மத்நஸயீஇப்னுமாஜ்ஜா

சுத்தமான பொருள்கள் கலந்துவிட்ட தண்ணீர்

நபி صلى الله عليه وسلم அவர்களின் மகளார் ஜைனபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இறப்பெய்தியபோது, எங்களிடம் அவர்கள் வந்து ‘மூன்று முரை அல்லது ஐந்துமுறை கழுவுங்கள்அல்லது அதைவிட (தேவைப்பட்டால்) தண்ணீரில் இலந்தை இலைக்கொண்டு கழுவுங்கள். கடைசி முறையில் கற்பூரத்தில் அல்லது கற்பூரத்தில் சிறிதளவு அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்’  எனக்கூறினார்கள். 
அறிவிப்பவர்: உம்முஅதிய்யா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: ஜமாஅத்

நிச்சயமாக நபி صلى الله عليه وسلم அவர்களும்மைமுனா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் குழைத்த மாவின் சுவடு இருந்த ஒரு பாத்திரத்தில் குளித்தனர். 
அறிவிப்பவர்: உம்முஹானீ رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்நஸயீஇப்னுகுஜைமா

ஆகவே தண்ணீரில் சுத்தமான பொருட்கள் கலந்துவிடுவதால் அத்தண்ணீர் சுத்தமானதாகவே இருக்கும்.

தொழுகையின் அவசியம்

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும்தொழுகையை நிலை நாட்டுவதும்நோன்பு நோற்பதும்ஜகாத் கொடுப்பதும்சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்:புகாரிமுஸ்லிம்

தொழுகையை நிலை நிறுத்துங்கள்” 
அல்குர்ஆன் 30:31

நிச்சயமாக தொழுகை மூஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது”  
அல்குர்ஆன் 4:103

நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது” 
அல்குர்ஆன் 107:45

மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்” என நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: திர்மிதீஅபூதாவூத்

ஏழு வயதானதும் குழந்தைகளுக்கு தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்

குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை எய்தி விட்டால் அடித்தாவது தொழச் சொல்லுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்அபூதாவூத்

ஏழு வயதையடைந்து விட்டால் குழந்தைக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸப்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அபூதாவூத்திர்மிதீஅஹ்மத்தாரமிதாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது மரண வேளையில் கூடத் தொழுகையைப் பேணுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 
அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்:இப்னுமாஜ்ஜா

தொழாதவர் காஃபிராகி விட்டார்

(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைத்தல் குஃப்ர் இவற்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: முஸ்லிம்

தமக்கும்அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி صلى الله عليه  وسلم கூறினார்கள்.  
அறிவிப்பவர்: புரைதாرَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீதிர்மிதீஅபூதாவூத்

இத்தகைய முக்கயத்துவம் வாய்ந்த தொழுகையை நிறைவேற்றாமல் அக்கறையின்றி இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தொழுகையின் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டியது நம்மீது கடமையாகும்.

தொழுகையை முஸ்லிம்கள் பலவாறாகத் தொழுகின்றனர். அவர்கள் தொழும் முறை சரிதானா என்பதை அறியாமலேயே தொழுகின்றார்கள். தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின்அத்தொழுகை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுதது போன்றுதான் அமைய வேண்டும். ஏனெனில்,

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

உளூவின் அவசியம்

உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.

மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும்முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும்உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள்” என இறைவன் கட்டளையிடுகிறான்.
அல்குர்ஆன் 5:6

உளூ நீங்கி விட்டால் மீன்டும் உளூச் செய்யாமல் தொழும் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: முஸ்லிம்

உளூச் செய்யும் முன் நிய்யத் எனும் எண்ணம் வேண்டும்

நிய்யத் எனும் எண்ணமின்றி கழுவப்படவேண்டிய உறுப்புகளைக் கழுவினாலும்,  உடல் நனையும்படி குளித்தாலும் கூட அது உளுவாகாது. ஏனெனில்

நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோஉடமைகளையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவ்விப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: முஸ்லிம்

நிய்யத் வாயால் மொழிவது இல்லை. வாயால் மொழியும்படி நபி صلى الله عليه وسلم அவர்களும் கற்றுத்தரவில்லை

பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல் بســـم الله 
நூல்கள்: அபூதாவூத்இப்னு மாஜ்ஜாஅஹ்மத்.

உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்

நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவ்விப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீதிர்மிதிஇப்னுமாஜ்ஜா

கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். 
அறிவ்விப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்நஸயீ

பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.

உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது” என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். 
அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

பல் துலக்குதல்வாய் கொப்புளித்தல்மூக்கைச் சுத்தம் செய்தல்

உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ன் சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீஅபூதாவூத்அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: நஸயீ

முகம்கைகளை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்துதமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். 
அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

தலைக்கும்காதுக்கும் மஸஹ் செய்யும் முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவிமீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்திர்மிதீநஸயீஅபூதாவூத்,, இப்னுமாஜ்ஜாஅஹ்மத்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும்காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم
அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அபீ முலைக்கா 
நூல்: அபூதாவூத்

அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்றுமுறை கழுகிமுகத்தையும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். 
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: அபூதாவூது

மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.

கால்களை கழுவுதல்குதிகால்களையும் சரியாக கழுவுதல்

உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். 
அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீஅபூதாவூத்

கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் “குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்” என்று கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிதிர்மிதிநஸயீஅபூதாவூத்இப்னுமாஜ்ஜாஅஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிஅஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபிصلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டுஇதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்தீங்கிழைத்து விட்டார்அநியாயம் செய்து விட்டார்” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்நஸயீஇப்னுமாஜ்ஜா

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.

நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்அஹ்மத்

நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது “ஜனாபத் தவிர மலஜலம்தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல்மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: திர்மிதிதிர்மிதி,  இப்னுமாஜ்ஜா,  இப்னுகுஸைமா

உளூச் செய்தபின் கூறவேண்டியவை

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: முஸ்லிம்

பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

கடமையான குளிப்பு

தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்புகடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லது விழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது.

ஸ்கலிதம் ஏற்பட்டால்

இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: அஹ்மத்தாரமீ

ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?” என்று உம்மு கலைம் (ரலி)நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது “ஆம்” என்று பதிலளித்தார்கள்” 
அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

மாதவிடாய் ஏற்படுதல்

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோநோன்பு நோற்கவோஉடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.

மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகைநோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும்மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

பிரசவ இரத்தம் வெளிப்படுதல்

பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்

பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.

ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன்தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?” எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டுகுளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!” என பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: முஸ்லிம்திர்மிதீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோதுஇந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல் நஸயீ

அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.

குளிக்கும் முறை

கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்தபின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை. குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவிவிட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டுமூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்துமூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். 
அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்திர்மிதீ

பெண்கள் சடை போட்டிருந்தால்

சடை போட்டுள்ள பெண்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது சடையை அவிழ்த்து விட வேண்டிய அவசியமில்லை.

இறைத்தூதரே! நான் எனது தலை முடியை சடை பின்னிக்கொண்டு இருக்கிறேன்! கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்த்துத்தான் விட வேண்டுமா?” என நான் கேட்டேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “வேண்டியதில்லைஉனது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்” என்றார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்திர்மிதீ

தயம்மும்ஆடைநிய்யத்தக்பீர் தஹ்ரீமா

தயம்மும்

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோகடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர்நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோகடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

தயம்மும் எப்படி செய்வது

இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்துகையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.

நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் 
அல்குர்ஆன் 5:6

தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” 
அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: அஹ்மத்

மேற்கூறிய இறை வசனத்திலும்ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக் கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்துஅதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்” என கூறினார்கள். 
அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: அஹ்மத்

தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்

தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.

இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவேஅந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்புஅத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, “நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்” என்றும்உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி உமக்கு இரு கூலிகள் உள்ளது” என்றும் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீஅபூதாவூத்

கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلمஅங்கீகரித் துள்ளார்கள்

தாதுஸ்ஸலாஸில்” எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلمஅவர்கள் அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே” என்று என்னிடம் கேட்டார்கள். உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறைவசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்” என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. 
அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அஹ்மத்அபூதாவூத்

மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلمஅவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

ஆடை

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். 
அல்குர்அன் 7:31

இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். 
அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்

தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.” 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம்முன்கைகால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபிصلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்என்பதை யாரும் அறியமாட்டார்கள்.” 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

பருவமடைந்த பெண்

பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அபூதாவூத்திர்மிதி

பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்

நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டுஅவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது” எனக்கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: புகாரி

உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்

ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன” எனக் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

நிய்யத் (எண்ணம்)

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை

எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.

'அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530


நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: முஸ்லிம்

தக்பீர் தஹ்ரீமா

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.

நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி அல்லாஹு அக்பர் எனக்கூறு” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: முஸ்லிம்

அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 735,முஸ்லிம் 586

நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 589


நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீதிர்மிதீ

உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்

நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும்இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்.” 
அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்.” 
அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: நஸயீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.” 
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: நஸயீ

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1. தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்

2. தொழுகையில் தொப்புகளுக்கீழே முன்கையைமுன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்

இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:

பலவீனமானவர்” என இப்னு முயீன்இப்னு ஹிப்பான்அபூஸர்ஆஅபூஹாதம்இப்னு குஸைமாஉகைலீஅஜலீபுகாரிநவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என அபூஹாதம்ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.

3. “தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்” என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.

4. அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.
  
ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதரே! என் தாயும்தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு,
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!
இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!

தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,


பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும்கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன். 
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்:முஸ்லிம்



தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்

ஸனா ஓதி முடித்தபின் அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் என்று ஆரம்பித்து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.

“(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக! 
அல்குர்ஆன் 16:98

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

முதல் ரக்அத்தில் மட்டும்தான் அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீமுஸ்லிம்

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என கூற வேண்டும். 

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.

சூரத்துல் ஃபாத்திஹா

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: நஸயீதிர்மிதீ

1:1
1:2
1:3
1:4
1:5
1:6
1:7

பொருள்: 
1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 
2. அளவற்ற அருவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன். 
3. தீர்ப்பு நாளின் எஜமானன். 
4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 
5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!)
7. (உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.

குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்” என இறைவன் கூறியுள்ளான். 
அல்குர்ஆன் 7:204

இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
நூல்: முஸ்லிம்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்” 
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: அபூதாவூத்இப்னுமாஜ்ஜா

இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும்போது ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். 
அறிவிப்பவர்: அதா 
நூல்: பைஹகீ

இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.

ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை

ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். 
ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்அஹ்மத்

முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) 
நூல்கள்: அஹ்மத்முஸ்லிம்

முழு அத்தியாயமாக ஓதுதல்

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்களை ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயாஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலாவஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதாஎன்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். 
அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்அஹ்மத்

ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்

குர்ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்”(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: முஸ்லிம்அஹ்மத்

ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். 
நூல்: அபூதாவூத்

ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: நஸயீ

அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். 
அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம்அஹ்மத்நஸயீ

இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். 
அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரிமுஸ்லிம்அஹ்மத்

அத்தஹிய்யாத் இருப்பு முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும்இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம்அஹ்மத்நஸயீதாரமி

இருப்பில் ஓதவேண்டியவை



அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு” என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். 
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்கள்: புகாரி,முஸ்லிம்அஹ்மத்அபூதாவூத்நஸயீதிர்மிதீஇப்னுமாஜ்ஜா

பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும்எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும்முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கடைசி இருப்பில் அமரும் முறை

எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்” 
அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்: புகாரி

கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும்.

ஸலவாத் ஓதுதல்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى

آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். 
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ 
நூல்: புகாரி

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல்முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும்முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும்கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும்இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும்முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும்கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரிவஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்கள்: முஸ்லிம்அபூதாவூத்திர்மிதிநஸயீஅஹ்மத்

பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வுமரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும்கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.



அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்” என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். 
அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: புகாரிமுஸ்லிம்

பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவேஎன்னை மன்னிப்பாயாக! மேலும்எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.

அத்தஹிய்யாத்ஸலவாத்துஆக்கள் ஓதிய பிறகு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ

தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்” என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: அபூதாவூத்திர்மிதீஇப்னுமாஜ்ஜா

ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும்இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். 
அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ
நூல்கள்: முஸ்லிம்நஸயீ

இதுதான் தொழும் முறையாகும். தொழும் முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான். வெவ்வேறு முறைகளில்லை.

http://www.readislam.net/

காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில தடவினால் போதுமா? அல்லது மேல், கீழ் பாகத்தில் தடவினால் போதுமா?
காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி? காலுறை அணிந்து ஒளு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? 
தொழுகைக்காக உளூச் செய்யும்போது தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்த வேண்டிய உறுப்புகளில், இரு கால்களையும் கரண்டைவரை கழுவவேண்டும் என இறைமறை வசனம் (005:006) கூறுகின்றது. 

கால்களைக் கழுவித் தூய்மைப்படுத்தியபின் காலுறைகள் அணிந்திருந்து பின்னர் உளூ முறிந்து மீண்டும் உளூச் செய்யும்போது, காலுறைகளைக் கழட்டி கால்களைக் கழுவாமல், ஈரக் கையால் காலுறைகள் மீது தடவிக்கொண்டால் போதும் ஒளு நிறைவு பெற்றுவிடும் என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறைச் சட்டமாகவுள்ளது.

உளூச் செய்யும்போது கால்களைக் கழுவிக் கொள்ளாமல் காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொள்வதற்கான கால வரம்பு, பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகள் ஆக மூன்று நாட்களும், உள்ளூரில் இருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவு ஆக ஒரு நாள் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கால வரம்பு நிர்ணயித்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள்" என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், "பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 465, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

உள்ளூரில் இருப்பவர் உளூச் செய்யும்போது காலுறைகள் மீது ஈரக் கையால் மஸ்ஹுச் செய்வதற்கான கால வரையறை ஒரு நாள் என்றும்  பயணத்திலிருப்பவருக்கு மூன்று நாள் சலுகை என்றும் மேற்காணும் அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக்கொள்வது

நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்! (இருக்கிறது)" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அப்போது அவர்கள், "அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்)இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்" என்று சொல்லி, (ஈரக் கையால்)அவற்றைத் தடவிக் கொண்டார்கள். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: புகாரி 363, முஸ்லிம் 459, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம்(இது குறித்து), "இவ்வாறு செய்யலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்(செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள்" என்று பதிலளித்தார்கள்.(அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) நூல்கள்: புகாரி 387, முஸ்லிம் 452, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).

இந்த அறிவிப்புகளிலிருந்து, காலுறைகள் அணிந்திருந்தால் உளுச் செய்யும்போது காலுறைகளைக் களைந்துவிட்டு  கால்களைக் கட்டாயம் கழுவவேண்டும் என்கிற சட்டம் இல்லை. மாறாக, காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொண்டாலே போதுமானது என்று விளங்குகிறோம்.

காலுறையின் எந்தப் பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது?

பொதுவாக, அனைத்து அறிவிப்புகளிலும், நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த காலுறைகள் மீது ''ஈரக் கையால் தடவினார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. திர்மிதீ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ''கால்களின் மேற்புறமும், கீழ்ப்புறமும் தடவிக் கொண்டார்கள்'' என்று பதிவாகியுள்ள அறிவிப்பில் இடம்பெறும் வலீத் பின் முஸ்லிம் என்பவர் நபிமொழி அறிவிப்புகளில் அதிகம் தவறிழைப்பவர் என்றும் இது குறைபாடுள்ள அறிவிப்பாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் (உளூச் செய்யும்போது தம் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்: திர்மிதீ 98).

இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸாகும் என இமாம் திர்மிதீ குறிப்பிடுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும், அப்துர்ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் என்பவரைக் குறித்து மாலிக் (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளதாக இமாம் புகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆயினும், இந்த அறிவிப்பை வலுப்படுத்தும் வகையில் நபித்தோழர் அலீ (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் உள்ளதால் இவ்வறிவிப்பு 'ஹஸன்-ஸஹீஹ்' என்கிற நிலைக்கு உயர்கிறது.

மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்பாகத்தைவிட மஸ்ஹுச் செய்வதற்குத் தகுதியானதாகும். ஆனால், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தின் மீது மஸ்ஹுச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்'' என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்து கைர் (ரஹ்) நூல்: அபூதாவூத் 162).

செயல் முறை

கால்கள் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறைகளை அணிந்திருந்தால் உளூ முறிந்து விட்டாலும் காலுறைகள் அணிவிக்கப்பட்டக் கால்களின் தூய்மை நிலை மாறுவதில்லை. அதனால் மறு உளூவின் நிபந்தனைகளிலிருந்து காலுறைகள் அணிந்த கால்கள் கழுவப்பட வேண்டியதில்லை எனும் விதிவிலக்குப் பெறுகின்றன. எனினும், ஈரக் கையால் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவ வேண்டும்.

காலுறைகள் அணிந்து ஷூ அணிந்த நிலையில் உளூச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது காலுறைகளின் மேற்பகுதி மட்டுமே வெளிப்படும். எனவே, கால்களின் மேற்பகுதியை ஈரக் கையால் தடவிக் கொள்ள வேண்டும். அல்லது ஷூவிலிருந்து கால்களை உருவி வெளியிலெடுத்து காலுறையின் மேற்புறத்தில் தடவிக் கொள்ளலாம்.  இதுவே ''நபி (ஸல்) அவர்கள் காலுறைகளின் மீது ஈரக் கையால் தடவினார்கள்'' என்பதற்குப் பொருத்தமாகவுள்ளது.

காலுறையின் மேற்புறத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொண்டால் போதுமானது. இது தவிர நாமறிந்து, காலுறைகள் அணிந்து உளூச் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை வேறொன்றும் இல்லை!



No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...