Wednesday, July 2, 2014

ஒரு குருவியை ஒருவன் கொல்ல முயன்றால் ?

யாராவது ஒரு மனிதன் ஒரு சிட்டுக் குருவியை அல்லது அதை விடப் பெரியதை நியாயமில்லாமல் கொலை செய்தால் அது பற்றி அல்லாஹ் மறுமை நாளில் விசாரிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, நியாயமான முறை என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதை (முறைப்படி) அறுத்து சப்பிடுவதாகும். அதன் தலையைத் துண்டித்து எறியாமல் இருப்பதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: நஸயீ (4274. 4369) அஹ்மத் (6263. 6666) தாரிமீ (1896)

இதே செய்தி ஹாகிம், பைஹகீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னதுல் ஹுமைதீ, முஸ்னத் தயாலிஸீ உட்பட இன்னும் பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து நூல்களிலும் ஸுஹைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். எனவே இவர் அறிவிக்கும் செய்திகள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது.

எனினும் அநியாயமாக யாரையும் கொல்லக் கூடாது என்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான சான்றுகள் உள்ளன.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...